காஷ்மீர் எப்போதும் இந்தியாவுக்குத்தான்: வாஜ்பாய்
பெரோஸ்பூர்:
பாகிஸ்தான் எவ்வளவுதான் காஷ்மீர் தினத்தைக் கொண்டாடினாலும் காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருபகுதிதான் என்றும் அதை நம்மிடமிருந்து அந்த நாட்டால் பிரிக்கவே முடியாது என்றும் பிரதமர் வாஜ்பாய் இன்று(புதன்கிழமை) கூறினார்.
இதையொட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப், காஷ்மீர்தீவிரவாதத்தை வழக்கம்போல் சுதந்திரப் போராட்டம் என வர்ணித்தார்.
மேலும் தீவிரவாதிகள் விவகாரத்தில் சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதல் அதிகரித்து வந்தாலும்காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு தொடர்ந்து உதவுவோம் எனவும் முஷாரப் திமிராகக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பஞ்சாப்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய வாஜ்பாய்,அவர்களால் காஷ்மீர் தினத்தைத்தான் கொண்டாட முடியுமே தவிர ஒருநாளும் அவர்கள் காஷ்மீரைப் பெறவேமுடியாது என்றார்.
எல்லையில் நாம் குவித்துள்ள ராணுவம் பாகிஸ்தானைத் தாக்குவதற்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ அல்ல;நம் நாட்டின் பாதுகாப்புக்காகத்தான் என்றும் வாஜ்பாய் கூறினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால், அடுத்த நாளே அந்நாட்டுடன் பேசுவதற்குஇந்தியா தயாராக உள்ளது என்றும் பிரச்சாரக் கூட்டத்தில் வாஜ்பாய் பேசினார்.
நான் பிரதமரான நாளிலிருந்தே பாகிஸ்தானுடன் நல்லுறவு நிலவ வேண்டும் என்ற நோக்கில்தான் லாகூருக்கு பஸ்போக்குவரத்து உள்பட பல அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஆனால் அவர்கள் கார்கில்போரைத்தான் எனக்குப் பரிசாகத் தந்தார்கள் என்றும் வாஜ்பாய் கூறினார்.












Click it and Unblock the Notifications