அரசுக் கல்லூரி மாணவர்களின் "பஸ் தின" அட்டகாசங்கள்
சென்னை:
சென்னையில் அரசுக் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தொடருகிறது.
கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பஸ் தினம் என்ற பெயரில் தங்கள் கல்லூரி வழியாக செல்லும்பஸ்களுக்கு அலங்காரம் செய்து, டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நட்புறவு வழக்கம் தற்போது வன்முறையின் பிறப்பிடமாக மாறியுள்ளது. குறிப்பாக சென்னையில் பஸ் தினம்என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் மாணவர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்கள்புகார் கூறுகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி மாணவர்கள் இதேபோல பஸ் தினம் என்ற பெயரில்கொண்டாடியபோது அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பஸ்களின் மேல் மாணவர்கள் அமர்ந்து கொண்டும், டிரைவருக்கு சாலையே தெரியாத வகையில் பூக்களால்அலங்கரித்தும், சாலைகளில் சென்ற பெண்கள், மாணவிகளை கேலி செய்தும் பொதுமக்களின் முகச் சுளிப்பைவாங்கிக் கட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள மற்றொரு அரசுக் கல்லூரியான நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள், பஸ்தினம் கொண்டாட மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ்களை வழங்காததால், பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி,கண்ணாடிகளை உடைத்து வன்றையில் ஈடுபட்டனர்.
பஸ் தினம் கொண்டாட தனி பஸ்களை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர். ஆனால் கடந்த கால சம்பவங்களை மனதில் கொண்டு தனி பஸ்கள் வழங்க இயலாது என்றுபோக்குவரத்துக் கழகம் மறுத்து விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், வழக்கமான பஸ்களில் ஏறிக் கொண்டனர். 100க்கும் மேற்பட்டமாணவர்கள் இரண்டு பஸ்களில் பயணித்தனர்.
அந்த பஸ்களில் வழக்கமான பயணிகளும் இருந்தனர். பஸ்களில் ஏறிய மாணவர்கள் பாட்டுப் பாடியும்,சாலைகளில் போவோரைக் கேலி செய்தவாறும் பயணித்தனர். இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பெரும்அவதிக்குள்ளாகினர்.
பஸ்கள், கல்லூரி அருகே வந்ததும் மாணவர்கள் பஸ்களை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். அதன் பிறகு திடீரெனதாங்கள் வந்த பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர்.
திடீரென நடந்த இந்தக் கல்வீச்சால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் கீழே இறங்கி ஓடினர். இதனால்அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து சில மாணவர்களைக் கைது செய்தனர். கல்வீச்சில் இறங்கியமாணவர்களை விரட்டியடித்தனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications