"மனித உரிமை பற்றி பேச பாக்.குக்கு என்ன உரிமை?"
ஹால்த்வானி (உத்தராஞ்சல்):
மனித உரிமை மீறல்களின் மொத்த உருவமான பாகிஸ்தானுக்கு இந்தியாவில் நடப்பதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்களைப் பற்றிப் பேச உரிமையே கிடையாது என்று பிரதமர் வாஜ்பாய் கடுமையாகக் கூறினார்.
ஆனால் பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அங்கு எந்தஅளவுக்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு ராணுவ ஆட்சி நடத்தி வரும் ஒருவர் இந்தியாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுவதற்குஎன்ன உரிமை உள்ளது என்று வாஜ்பாய் உத்தராஞ்சலில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் சிறிது காட்டமாகவேபேசினார்.
மேலும் காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சி செய்கிறதுஎன்றும் வாஜ்பாய் கூறினார்.
இதற்கிடையே உள்துறை அமைச்சர் அத்வானியும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்பைக் கடுமையாகத்தாக்கிப் பேசியுள்ளார்.
காஷ்மீரில் சுதந்திரப் போராட்டம்தான் நடந்து வருகிறது என்று முஷாரப் தொடர்ந்து கூறி வருவதையும் அத்வானிகண்டித்தார்.
இந்தியாவின் ஒரு பகுதிதான் காஷ்மீர் என்பதை வலியுறுத்திப் பேசிய அத்வானி, இம்மாநிலத்தைக் கைப்பற்றபாகிஸ்தான் 3 போர்களை நடத்திப் பார்த்து தோல்வியடைந்ததுதான் மிச்சம் என்றும் கூறினார்.
இதற்கிடையே பாகிஸ்தானின் குற்றவாளிகள் பட்டியலில் அத்வானி பெயரும் உள்ளதே என்ற கேள்விக்கு அவர்நேரடியாகப் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
பட்டியல் இருப்பதாகப் பாகிஸ்தான் கூறிக் கொண்டிருக்கிறதே தவிர, எந்தவொரு பட்டியலையும் இதுவரைஇந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றும் அத்வானி கூறினார்.
சண்டிகரில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் அத்வானி இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications