பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் தேவை: வாசன்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்கவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானஏக்கர்களில் விளைந்திருந்த நெற்பயிர்கள் மூழ்கிவிட்டன.
இப்பகுதிகளுக்கு நேரில் சென்று முழங்கால் உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியிருந்த வயல்களில் இறங்கிப்பார்வையிட்டார் வாசன்.
விவசாயிகளும் தண்ணீரில் மூழ்கி அழுகிப் போயிருந்த நெல்மணிகளை எடுத்து வாசனிடம் காண்பித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வாசன், பாதிக்கப்பட்ட இந்த விவசாயிகள் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்என்றும் அவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications