பின் லேடன் கொல்லப்பட்டனா? - அமெரிக்கா மெளனம்
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் சமீபத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குலில் கொல்லப்பட்டதாகவந்த தகவல்கள் குறித்து பதிலளிக்க அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தோரா போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் நடத்திய பலத்த குண்டு வீச்சு காரணமாக அங்கிருந்துதப்பித்த பின் லேடன் உள்ளிட்ட அல்-கொய்தா தீவிரவாதிகள், ஜாவார் குகைப் பகுதிக்குத் தப்பி அங்குஒளிந்திருந்ததாக சி.பி.எஸ். செய்தி நிறுவனம் கூறியது.
இந்த ஜாவார் குகைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பின் லேடன்உள்ளிட்ட சில அல்-கொய்தா தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையோ சி.ஐ.ஏ. உளவுத் துறையோ இதுகுறித்து வாய் திறக்க மறுக்கின்றன.
இதுகுறித்து நாங்கள் எதுவும் இப்போதைக்குக் கூற இயலாது என்று சி.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் ஒருவர்கூறினார்.












Click it and Unblock the Notifications