நாகர்கோவிலில் பஸ் ஊழியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, நாகர்கோவிலில் போக்குவரத்துத்தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போனஸ் மறுக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்துதொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானபணியாளர்களை அரசு நீக்கியது.

இந்நிலையில் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களதுகுடும்பங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை வேலையில் திரும்பவும் சேர்க்கவேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இந்தசம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின்போதுவலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+