காவிரி பிரச்சனை: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய கர்நாடகம் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரியில் தண்ணீர் விடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவது குறித்து தமிழகம், கர்நாடகாவுக்கு இடையே பல வருடங்களாகபிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனுவில்கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடகம் ஆண்டு தோறும் 205 டி.எம்.சி. காவிரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விட வேண்டும் என்று நடுவர் மன்றம்உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.

எனவே காவிரியில் தண்ணீர் விடும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பதில் மனுத் தாக்கல் செய்யும்படி கர்நாடகத்துக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி கர்நாடகம் நேற்று (வியாழக்கிழமை) பதில் மனுத் தாக்கல் செய்தது.

தமிழ்நாட்டுக்கு கடந்த ஜூன் முதல் ஜனவரி வரை 256 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு அந்த மனுவில் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+