சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை கோரி வழக்கறிஞர்கள் போராட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் ஆரம்பிக்கக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் செய்ய முடிவுசெய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை தென் மாநிலங்களில் எங்காவது ஆரம்பிக்குமாறு சமீப காலமாக கோரிக்கை வலுத்துவருகிறது. எந்த வழக்கானாலும் கடைசியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது என்பதால் மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பில் திருப்தியடையாத பொதுமக்கள் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்கிறார்கள்.

ஆனால் இதற்காக அவர்கள் டெல்லிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் கால விரயத்தோடு பணமும் அதிகம்செலவாகிறது.

இதனால் தென் மாநிலங்களில் எங்காவது குறிப்பாக சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை நிறுவ வேண்டும்என்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்காக நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைத்து கிளை ஆரம்பிப்பது குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது.அந்தக் குழுவும் ஆய்வு செய்து சென்னையில் கிளையை ஆரம்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்துக்குப்பரிந்துரைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை மறுத்து விட்டது.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் இதற்காக ஒருநாள்போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் எல்லோரும் கலந்து பேசி உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்காகக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+