பாக்.குடன் இந்தியா விளையாட அமைச்சர் நிபந்தனை
சென்னை:
கிரிக்கெட் விளையாடுவதற்கான நல்ல சூழலை முஷரப் ஏற்படுத்தினால், இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடஎந்த தடையும் இல்லை என்று மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இருந்து இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டோம் என்று அறிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் முஷரப் இந்தியாவுடன் எங்கு வேண்டுமானாலும்எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் ஆட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை)கூறியதாவது:
கிரிக்கெட் விளையாட்டில் கூட பாகிஸ்தான், இந்தியாவுடன் வெறுப்புடன் தான் விளையாடி வந்தது. தீவிரவாதத்தைபாகிஸ்தான் ஆதரிக்கிறது என்று நாம் கூறுவதைத் திசை திருப்புவதற்கு தான் முஷாரப் இது மாதிரி கூறியுள்ளார்.
அவர் உண்மையிலேயே நல்ல நோக்கோடு கூறியிருந்தால், முதலில் அவர் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் நிறுத்த வேண்டும்.
இதையெல்லாம் செய்து முடித்து, கிரிக்கெட் விளையாடுவதற்கான நல்ல சூழலை முஷாரப் ஏற்படுத்தினால்,இந்தியா கலந்து கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.












Click it and Unblock the Notifications