தங்கம் விலை ஒரே நாளில் ரூ.40 உயர்வு
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.40 அதிகரித்தது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,744 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,704 ஆக இருந்தது. கடந்த 4 தினங்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின்விலை ரூ.232 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால்தான் இங்கும் இந்த விலையேற்றம்ஏற்பட்டுள்ளதாக சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவதாலும்தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications