தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை
சென்னை:
தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமமுகப்படுத்தப்படும் என்று மாநில தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர் விவேக் ஹரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இந்திய, ஆஸ்திரேலிய வர்த்தக கூட்டமைப்பின் சார்பாக நடந்த தகவல் தொழில்நுட்பக்கருத்தரங்கைத் துவக்கி வைத்து ஹரிநாராயணன் பேசுகையில்,
தமிழகத்தில் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். இத்துறையில்இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இதில்அறிகப்படுத்தப்படும்.
கம்ப்யூட்டர் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.தற்போது இந்தியாவிலேயே கம்ப்யூட்டர் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம், கர்நாடகம் விளங்குகின்றன.
இந்தியாவில் 1,10,000 கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வல்லுனர்கள் உள்ளனர். உலக அளவில் உற்பத்தி செய்யப்படும்சாப்ட்வேர்களில் இந்தியாவின் பங்கு 30 சதவீதமாகும். இந்தியாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் 74 சதவீதநிறுவனங்கள் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளன என்று ஹரிநாராயணன் கூறினார்.












Click it and Unblock the Notifications