அயோத்தியில் சர்ச்சையற்ற நிலத்தை ஒப்படைக்க ஜெயேந்திர சுவாமிகள் வேண்டுகோள்
காஞ்சிபுரம்:
அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட 47 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று மத்திய அரசைவலியுறுத்துவோம் என்று காஞ்சி மடாதிபதியான ஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மொத்தமுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாகஉள்ளது.
இந்ந 20 ஏக்கர் நிலம் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவரை அனைவரும் காத்திருக்கவும் வேண்டும்.
ஆனால் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட மீதமுள்ள 47 ஏக்கர் நிலத்தை மார்ச் 12ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்என்று மத்திய அரசை வற்புறுத்துவோம் என்றார் ஜெயேந்திர சுவாமிகள்.
முன்னதாக தமிழக முஸ்லீம் லீக் தலைவரான எஸ். ஷேக் தாவூத் தலைமையிலான குழுவினர் ஜெயேந்திரசுவாமிகளைச் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது விஜயேந்திர சுவாமிகளும் அவர்களுடன்இருந்தார்.












Click it and Unblock the Notifications