டெண்டுல்கரைக் கடத்த திட்டமிட்ட ஜெய்ஷ் தீவிரவாதி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைக் கடத்த ஒமர் சயீத்ஷேக் என்ற ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி சதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அமெரிக்க மையம் மீது தாக்குதல் நடத்திய ஹர்கத்-உல்-ஜிகாத் தீவிரவாத இயக்கம் டெண்டுல்கர்மற்றும் கங்குலியை கடத்த சதி செய்திருப்பதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்தது.

இதைத் தொடர்ந்து டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. அவர்களுடையவீடுகளிலும் ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். இவர்களை கடத்த சதி செய்த தீவிரவாதிகள் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது இந்த சதி திட்டத்தில் லண்டன் பொருளாதார பள்ளியில் பயின்று பின்னர் தீவிரவாதியாக மாறிய ஒமர்சயீத் ஷேக் என்ற ஷேக் ஒமர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த ஜனவரி 23ம் தேதி கராச்சியில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஷேக் ஒமர்முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறான்.

டேனியல் கடத்தல் தொடர்பாக இவன் இ-மெயில் அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களைபாகிஸ்தான் போலீசார் சமீபத்தில் கைப்பற்றினர்.

அந்தக் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து இ-மெயில்களையும் பார்த்தபோதுதான், டெண்டுல்கர் மற்றும் கங்குலிஆகியோரை அவன் கடத்தத் திட்டமிட்டிருந்த சதியும் போலீசாருக்குத் தெரிய வந்தது.

கடந்த 1999ல் காட்மண்டுவில் இருந்த காண்டஹாருக்கு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, இந்தியா விடுதலைசெய்த தீவிரவாதிகளில் ஷேக் ஒமரும் ஒருவன். கடந்த 1994 முதல் இந்தியச் சிறையில் இருந்த ஷேக் ஒமர்,விடுதலை செய்யப்பட்ட பிறகு ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பில் சேர்ந்தான்.

ஷேக் ஒமரை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+