மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர்:
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக வேளாண்மைத்துறை அமைச்சர் ஜீவானந்தம் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெய்த கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் உட்பட காவிரி டெல்டா பகுதிகளில்லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும்வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஜீவானந்தம் தஞ்சாவூரில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
ஆனால் தேர்தல் விதிமுறைப்படி புதிதாக எந்த நலத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது.அதனால் தான் தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜீவானந்தம்கூறினார்.












Click it and Unblock the Notifications