ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தை முடித்தார் பன்னீர்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் 3 நாட்கள் மேற்கொண்டிருந்த தீவிரப் பிரசாரத்தை நேற்று (வியாழக்கிழமை) இரவு 11மணியுடன் முடித்துக் கொண்டார் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஆதரித்து பன்னீர்செல்வம் கடந்த 3நிாட்களாக ஆண்டிப்பட்டி தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பன்னீர்செல்வத்தின் பிரசாரம் வியாழக்கிழமை இரவு 11 மணியுடன் முடிவடைந்தது. பிரசாரத்தை முடிந்ததும் அவர்இரவு மதுரை சென்று தங்கினார். பின்னர் இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆண்டிப்பட்டியில் மேற்கொண்டிருந்த பிரசாரத்திற்கு இடையே வியாழக்கிழமை காலை பெரியகுளம்சென்ற பன்னீர்செல்வம் அங்குள்ள தனது வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
அப்போது நெஞ்சுவலி காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுகுணமடைந்துள்ள அமைச்சர் தளவாய் சுந்தரம் பன்னீர்செல்வத்தை சென்று பார்த்தார்.












Click it and Unblock the Notifications