"ரேஷன் பொருட்கள் குறைந்தால் ஊழியர்களுக்கு அபராதம்": தமிழக அரசின் உத்தரவுக்கு தடை
சென்னை:
ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் கையிருப்பு குறைந்தால் அதற்கு ஊழியர்கள் அபராதம் கட்ட வேண்டும்என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ரேஷன் கடைகளில் கையிருப்பில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்கும்போது பல சமயங்களில் பொருட்கள்குறைந்திருப்பது தெரிய வரும்.
இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள்தான் பொறுப்பு என்றும் குறைந்துள்ள பொருட்களின் அளவுக்கேற்ப அவர்கள்அபராதம் கட்ட வேண்டும் என்றும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரேஷன் கடைக்கு வரும் வழியிலேயே பல்வேறுகாரணங்களால் பொருட்கள் சேதமாகி, குறைந்தும் போய் விடுகிறது என்று அவர்கள் கூறினர்.
எனவே தமிழக அரசின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும் இதுகுறித்து பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி முருகேசன் தமிழக அரசுக்குஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications