தமிழகத்தில் ரெவின்யூ ஸ்டாம்புக்கு கடும் தட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் ரெவின்யூ ஸ்டாம்ப் மற்றும் இந்திய அரசுப் பணி ஸ்டாம்ப் ஆகியவற்றுக்குப் பெரும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளதையடுத்து பல்வேறு அரசு நிறுவனங்களில் பணம் வழங்கும் பணிகளும் தபால் அனுப்பும் பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.500க்கும் மேற்பட்ட தொகையைஒருவருக்கு அளிக்கும்போது, அதற்கு அத்தாட்சியாக ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அவரிடம் கையெழுத்துவாங்கப்படும்.

ரூ.1 மதிப்புள்ள இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் பெரும்பாலும் தபால் நிலையங்களில்தான் விற்பனையாகும்.

அப்போதைக்கு அப்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்புகளுக்குத் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான். ஆனால்இம்முறை தொடர்ந்து நீண்ட நாட்களாகவே ரெவின்யூ ஸ்டாம்ப் கிடைக்கவில்லை என்று தபால் நிலையங்கள்கூறியுள்ளன.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக, ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்குவதற்கான உரியமுன் பணத்தை தபால் நிலையங்களுக்கு அரசால் அனுப்ப முடியவில்லை.

இதனால் பல்வேறு துறை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தைக் கூட வாங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.ஆனால் எல்.ஐ.சி. உள்பட சில பொதுத் துறை நிறுவனங்கள் ரெவின்யூ ஸ்டாம்புகள் இல்லாமலேயே ரசீதுகளைவழங்கி வருகின்றன.

இதற்கிடையே இந்திய அரசுப் பணி ஸ்டாம்புகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால்ஆயிரக்கணக்கான அரசுத் துறை சம்பந்தப்பட்ட தபால்கள் பட்டுவாடா செய்யப்பட முடியாமல் தபால்நிலையங்களில் தேங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+