பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக ஸ்டாலின் மீது வழக்கு
தேனி:
ஆண்டிப்பட்டியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது விதிமுறைகள் மீறப்பட்டதாக ஸ்டாலின் உட்பட திமுகவினர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் சேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக புதன்கிழமை மாலை ஸ்டாலின்கண்டமனூருக்கு வந்தார். அங்கு பிரச்சாரத்தை துவக்கிய ஸ்டாலின் மயிலாடும்பாறை, கரட்டுப்பட்டி , முருக்கோடைபகுதிகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் எதிர்திசையில் முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதனால் முதல்வர்பிரச்சாரத்தை முடித்த பிறகு, உங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கலாம் என்று ஸ்டாலினிடம் போலீசார் கூறினர்.
ஆனால் இதற்கு ஸ்டாலினுடன் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் போலீசார் ஸ்டாலினுடன் விதிமுறைக்கு புறம்பாக பல கார்கள் தொடர்ந்து வந்தது குறித்தும் போலீசார்எச்சரித்தனர்.
பிறகு இதே நிலைமை வாலிப்பாறை பகுதியிலும் ஏற்பட்டது. முதல்வர் வருவதை காரணம் காட்டி எங்களைபிரச்சாரம் செய்ய விடாமல் வேண்டுமென்றே தடுக்கிறீர்கள். எங்களுக்கு நேரம் வீணாகிறது, வழி விடுங்கள் என்றுதிமுகவினர் போலீசார் கேட்டனர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தேர்தல் விதிமுறையை மீறி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பல கார்கள் தொடர்ந்து வந்ததால் தேர்தல் விதி மீறல்சட்டப்பிரிவு படி ஸ்டாலின் மீதும் திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஸ்டாலினுடன்வந்த கார்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications