யாரையும் ஆதரிக்க மாட்டோம்: சங்கரய்யா
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று தமிழக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சங்கரய்யா கூறினார்.
சென்னையில் இன்று சங்கரய்யா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் நேர்மையான முறையில் நடக்காது. இது எங்களுக்கு நன்கு தெரிந்ததால்தான் அங்குநாங்கள் போட்டியிடவும் இல்லை.
மேலும் ஆண்டிப்பட்டி தேர்தலில் நாங்கள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடப் போவதில்லை. எந்த கட்சியையும்ஆதரிக்கப் போவதும் இல்லை.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரச போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிவாரணம்வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளின் கடன், வரிகளை உடனடியாக விலக்க வேண்டும்.
எங்கள் கட்சியின் மாநாடு வரும் 11ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் மார்க்கசிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கலந்து கொள்வார் என்று சங்கரய்யா கூறினார்.












Click it and Unblock the Notifications