சோனியா வெளிநாட்டவர் என்று கூறிய வாஜ்பாய்
டெல்லி:
சோனியா காந்தி வெளிநாட்டைச் சேர்ந்த பெண் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியதையடுத்து காங்கிரஸ் கட்சிபெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது.
வாஜ்பாயின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு வாஜ்பாய்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
இதற்கு விளக்கமளித்து வாஜ்பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் பிறந்தவர் என்பதை வைத்துதான் சோனியாவை நான் வெளிநாட்டுப் பெண் என்று கூறினேன்.அவரை அவமரியாதையாகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு பேசவில்லை.
மேலும் சோனியாவை நான் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை. அரசியல் ரீதியாகத்தான் அவரைக் குறைகூறினேன்.
காங்கிரஸ் தலைவர் பெண் என்ற முறையில் இந்தியக் கலாச்சராப்படி சோனியா மதிக்கப்பட வேண்டும் என்றநோக்கத்துடன்தான் அவரைப் பற்றிப் பேசினேன் என்று அவ்வறிக்கையில் வாஜ்பாய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications