வீரப்பனின் முக்கியக் கூட்டாளி கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான தாளவாடி அக்பர் என்பவரை அதிரடிப்படை போலீசார்சத்தியமங்கலம் காட்டில் வைத்துக் கைது செய்தனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம், அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்களை அவ்வப்போதுஅதிரடிப்படை போலீசாருக்கு கந்தவேலு என்பவர் சொல்லி வந்தார்.

அவர் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர். இதையடுத்து கடந்த 1998ம் ஆண்டு கந்தவேலுவை, வீரப்பன் கும்பல்காட்டுக்குள் அழைத்துச் சென்று படுகொலை செய்தது.

இந்தப் படுகொலை தொடர்பாக தாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலைசம்பவத்தில் தாளவாடி அக்பர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியில் ஒரு நபரை அதிரடிப்படை போலீசார் பிடித்தனர். அவரிடம்விசாரித்ததில், அவர்தான் அக்பர் என்று தெரிய வந்தது.

பிடிபட்ட அக்பர் பின்னர் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் பவானி கோர்ட்டில்ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+