கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரி
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த அரசு மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும்.
ரூ. 31.13 கோடி மதிப்பில் இந்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது.
இந்த மருத்துவக் கல்லூரிக்காக 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையும் கட்டப்படவுள்ளது.
ரூ. 1 கோடியில் பெண்களுக்கு புதிய திட்டம்:
தமிழகத்தில் ரத்த சோகையால் பெண்கள் அவதிப்படுவதைத் தடுக்கும் வகையில், 53 லட்சம் பெண்களுக்கு இலவசஇரும்புச் சத்து மற்றும் வைட்டமின் மாத்திரைகளைக் கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை முதல்துவக்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ரூ.1 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பள்ளிகள், பால்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் இளம்பெண்களுக்கு இந்த இலவச மாத்திரைகள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications