இலங்கை: நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் தயார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்துக்கான இறுதி ஒப்பந்தம் தயாராகிவிட்டது.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மிக விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

கடந்த 2 நாட்களாக இலங்கையில் அமைச்சர்கள் பெரிஸ், மிலிண்டா மொரகோடா ஆகியோருடன் தொடர்ந்துஆலோசனை நடத்திய நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெலஸ்ஜெசன் இந்த ஒப்பந்தத்தைத்தயாரித்தார்.

இந்த வரைவு ஒப்பந்தத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது.

முன்னதாக லண்டனில் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ஆண்டன் பாலசிங்கத்துடன் இந்தக் குழு ஆலோசனைநடத்தியது. புலிகள் தரப்பில் கூறப்பட்ட யோசனைகளும் நிபந்தனைகளும் இந்த ஒப்பந்ததில் இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்ததில் ஒரே ஒரு பிரச்சனையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று தெரிகிறது. புலிகளுக்குஆயுதம் கொண்டு வருவதாகக் கருதப்படும் கப்பல்களை தடுத்தி நிறுத்தி சோதனையிட தங்களுக்கு அதிகாரம்வேண்டும் என இலங்கை அரசு கூறுகிறது. இதற்கு புலிகள் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் புலிகளின் கோரிக்கையை ஏற்று இனி ராணுவரீதியில் புலிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என்று ஒப்புக் கொள்ள இலங்கை அரசு முன்வந்துள்ளது. இதன்படி தரைவழியாகவோ, கடல்வழியாகவோ, வான்வழியாகவோ புலிகள் மீது இலங்கை எந்தத் தாக்குதலையும் நடத்தாது.

ஆனால், அதே நேரத்தில் இலங்கையின் பாதுகாப்பு கருதி கடலில் சந்தேகப்படும்படி வரும் கப்பல்களை நிறுத்திசோதனையிட தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என இலங்கை அரசு கோருகிறது.

இந்த ஒரு விஷயத்தில் தான் இரு தரப்பினருக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் நிச்சயம் கையெழுத்தாகும் என இலங்கை இனப் பிரச்சனையை இப்போது கையாண்டுவரும் அமைச்சர்களான பெரிஸ் மற்றும் மில்ண்டா மொரகோடா ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த வரைவு ஒப்பந்தத்துடன் நார்வே தூதுக்குழுவினர் மீண்டும் லண்டன் சென்று லண்டன் பாலசிங்கத்தைச்சந்திப்பர் என்று தெரிகிறது. இதன் பின்னர் பிரச்சனைகுறிய விவகாரம் தொடர்பாக ஒரு தீர்வு காணப்படும்.

இதன் பின்னர் இரு தரப்பினரும் இந்த நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவர் என்றுஎதிர்ார்க்கப்படுகிறது.

மிகுந்த நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை முடிந்து வரைவு ஒப்பந்தமும் நார்வே குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளதுஎன அமைச்சர் பெரிஸ் கூறினார்.

கடந்த கிருஸ்துமஸ் தினத்தன்று இரு தரப்பினரும் தாற்காலிக ஒரு மாத கால போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.பின்னர் அது மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஒரு மாதம் முடிவதற்குள் இருதரப்பினருக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நார்வே அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+