விருந்தினர் மாளிகையில் ஒதுக்கீடு ரத்து: வழக்கு தொடர கருணாநிதி முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செல்லும் வழியில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த திண்டுக்கல் விருந்தினர் மாளிகைஅறையை தமிழக அரசு ரத்து செய்தது குறித்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
சென்னையில் கருணாநிதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் எனக்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் போலி கடிதம் கொடுத்துஅந்த அறை ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டனர்.
இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடமும் தமிழக ஆளுநரிடமும் தெரிவித்து, புகார் கடிதமும்கொடுத்துள்ளோம்.
அறை ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக கழக வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.விரைவில் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்படும்.
இது ஒரு இடப் பிரச்சனை அல்ல; உரிமைப் பிரச்சனை என்றார் கருணாநிதி.
மேலும், ஆண்டிப்பட்டியில் ஒருதலைப் பட்சமாகத் தேர்தல் நடக்கிறது என்று கூறிய கருணாநிதி, ஆனால் நாங்கள்துணிவோடு அதை எதிர்கொண்டு வெல்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications