சென்னையில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் பெண் பிணம்: இலங்கையை சேர்ந்தவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சூட்கேஸில் இளம்பெண் கொல்லப்பட்டுஇருந்தது குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை பாரிமுனை பஸ் நிலையத்தில் ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடந்தது.இந்த சூட்கேஸை கைப்பற்றிய போலீசார் அதை திறந்து பார்த்த போது, அதில் ஒரு இளம்பெண் கொல்லப்பட்டுஇருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த கொலை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் அந்தபெண் பெயர் ஜானகி என்று அவரது அக்கா சரஸ்வதி போலீசில் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஜானகியின் கணவர் பெயர் உதயகுமார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள்இலங்கையில் உள்ள கொழும்புவில் வசித்து வந்துள்ளனர். இவரது கணவரும், கணவரின் தங்கை குமுதவள்ளியும்இவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

ஜானகி அடிக்கடி சென்னையில் உள்ள அக்கா வீட்டிற்குச் செல்வது வழக்கம். ஆனால் கொலையாவதற்கு 2மாதங்களுக்கு முன்பிருந்தே அவரது அக்கா வீட்டிற்கு உதயகுமாரும் குமுதவள்ளியும் அனுப்பவில்லை. மேலும்அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஜானகியை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

சம்பவ தினத்தன்று இருவரும் சேர்ந்து ஜானகியை பலமாக தாக்கியுள்ளனர். பிறகு உதயகுமார் 2 சூட்கேஸ்களைவாங்கி வந்ததாக அவரது 8 வயது மகன் கவுதம் போலீசில் தெரிவித்துள்ளான்.

இது சம்பந்தமாக போலீசார் ஜானகியின் கணவர் உதயகுமார், குமுதவள்ளி உள்ளிட்ட 3 பேரை விசாரித்துவருகின்றனர். அவர்கள்தான் கொலை செய்தார்களா என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+