நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பெரும் தீ: நாசவேலை காரணமா?

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ரூ.2கோடி அளவிற்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் 2 அனல் மின் நிலைய யூனிட்கள் உள்ளன. இங்கு தமிழகத்துக்கு பயன்படும்வகையில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உள்ள 2வது யூனிட்டில் உள்ள இயந்திரப் பகுதியில் நேற்றிரவு (சனிக்கிழமை) தீப்பிடித்து திடீரென்றுவெடித்தது.

இதனால் ரூ.2 கோடி அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அனல் மின் நிலையத்தில் பெரும்பாலான பகுதிகள் முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்டவை. இந்தஇயந்திரப் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் கோளாறு ஏற்பட்டிருந்தாலோ, தீவிபத்திற்கான அபாயம்ஏற்பட்டாலோ அங்குள்ள மெயின் கம்ப்யூட்டர்களில் அவை பதிவாகி விடும்.

ஆனால் இதுபோன்ற எந்தத் தகவலும் மெயின் கம்ப்யூட்டர்களில் பதிவாகவில்லை என்பதால் இந்தத் தீவிபத்திற்குநாசவேலை காரணமாக இருக்கலாம் என்றும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டுஓரளவிற்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+