"மார்ச் 15க்கு மேல் ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பம்"
அயோத்தி:
அயோத்தியில் வரும் மார்ச் 15ம் தேதிக்கு மேல் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்று விஸ்வஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு கூறியுள்ளது.
மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு ஜோசியர்கள் தெரிவிக்கும் தேதியில் ராமர் கோவில் கட்டுமானப் பணியைத்தொடங்குவோம் என்று ராம ஜென்மபூமி நியாஸின் தலைவர் மஹந்த் ராம் சந்திர பரமன்ஸ் நிருபர்களிடம்கூறினார்.
ராமர் கோவில் கட்டுவதற்கான இடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக மத்திய அரசுக்குபோதுமான அளவு கால அவகாசம் கொடுத்து விட்டோம். ஆனால் வரும் மார்ச் 12ம் தேதிதான் இதற்குக் கடைசிநாள் என்றும் பரமன்ஸ் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வி.எச்.பியின் தலைவர் அசோக் சிங்கல், ராமர் கோவிலுக்கான 67 ஏக்கர் நிலத்தைஅளிப்பதில் எந்தவிதமான சட்டச் சிக்கல் இல்லை என்றும் ஒரு சிறிய துண்டு இடம்தான் சர்ச்சைக்குரியதாகியுள்ளதுஎன்றும் கூறினார்.
மத்திய அரசுடன் இந்துக்களும் முஸ்லீம்களும் நடத்தி வரும் பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, சர்ச்சைக்குரியஇடத்தில் மசூதியைக் கட்டிய ஷியா முஸ்லீம்களுடன் மட்டும்தான் அரசு இதுகுறித்து பேச வேண்டும் என்றும்சன்னி முஸ்லீம்களுக்கும் இவ்விஷயத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிங்கல் கூறினார்.












Click it and Unblock the Notifications