கலவர ஆபத்து: ஆண்டிப்பட்டியில் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பெரும் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதால், போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
ஆண்டிப்பட்டித் தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவதாக அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றன. அங்கு தேர்தலின் போது கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு உளவுத்துறை தகவல்அனுப்பியிருந்தது.
மேலும் வாக்குச் சாவடிகளைச் சூறையாடவும் சில குழுக்கள் திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அரசுக்குத் தகவல்வந்துள்ளது. இதையடுத்து தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா பாதுகாப்பை அதிகரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நரேஷ்குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தலின்போது கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது.எனவே அங்கு பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே தேர்தலின் போது கலவரம் நடக்காமல் இருப்பதற்கு 1,300 சிறப்புப் போலீசாரும், 400 தமிழகபோலீசாரும், 200 பிற மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
ஆண்டிப்பட்டி போலீசார் தவிர, தேனி மாவட்ட போலீசாரும் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்என்று நரேஷ்குப்தா கூறினார்.












Click it and Unblock the Notifications