ரிசர்வ் போலீஸ் கோரி ஆளுநரிடம் திமுக வேட்பாளர் மனு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ்பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடம் அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்வைகை சேகர் ஒரு மனுவை இன்று (திங்கள்கிழமை)கொடுத்தார்.
அந்த மனுவில் வைகை சேகர் கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸைபாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிமுகஅரசு பல கோடிகளில் நலப்பணித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த தொகுதிக்கு பல நலத்திட்டங்களை செய்யுமாறு அரசு நிர்வாகங்களை அதிமுக கட்டாயப்படுத்தியும்வருகிறது. புதிய சாலைகளும், போர்வெல்களும் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்காக பதிவு செய்து வைத்திருந்தஅறையை வேண்டுமென்றே ரத்து செய்துள்ளனர். அதிமுகவினரின் தூண்டுதலின் பேரிலேயே இது நடந்துள்ளது.
ஸ்டாலின் மீதும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அதிக கார்களைப் பயன்படுத்தியதாக போலீசார் பொய் வழக்குதொடர்ந்துள்ளனர்.
இவை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் சேகர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications