கள்ளச்சாராயத்தை தடுக்க பெண்களுக்கு அழைப்பு
சென்னை:
கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் பணியில் கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக் குழுக்கள் ஈடுபட வேண்டும் என்றுதமிழக பெண்கள் வளர்ச்சிக் கழகத் தலைவர் குத்சியா காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பது குறித்து விவாதிப்பதற்காக பெண்கள் வளர்ச்சிக்கழகம், மாநில அரசின் மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவுடன் இணைந்து சென்னையில் கருத்தரங்கு ஒன்றிற்குஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கருத்தரங்கில் குத்சியா காந்தி பேசுகையில் கூறியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களை, கள்ளச்சாராயத்தைத் தடுக்க பயன்படுத்தலாம்.தற்போதுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களை பயன்படுத்தி சாராயம் அருந்துவோர்குறித்த பட்டியலைத் தயாரிக்கலாம்.
போலீஸாருடன் இணைந்து சுய உதவிக் குழுக்கள் செயல்படலாம். இதன் மூலம் கள்ளச்சாராய நடமாட்டத்தையும்அவர்கள் கண்காணிக்கலாம். மாவட்டந்தோறும், குடிபோதையிலிருந்து மீட்பதற்கான மறுவாழ்வுக் குழுக்கள்அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுக்கள் மூலம், குடிப்பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், பிரச்சாரங்கள் நடத்தப்படவேண்டும் என்று குத்சியா காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications