மழைக்கு ரூ.300 கோடி பயிர்கள் நாசம்: வெள்ள நிவாரண குழுவினர் தகவல்
சென்னை:
சமீபத்தில் பெய்த கனமழையால் ரூ.300 கோடிக்கு பயிர்கள் நாசமடைந்துள்ளதாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவெள்ள நிவாரணக் குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம்மாவட்டங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்தன. சேத மதிப்பை அறிய நிவாரணக்குழு ஒன்று பாதிக்கப்பட்டமாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது.
இந்தக் குழு தனது மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை மாநில இயற்கை சீற்ற நிவாரணக் குழுவிடம் இன்று(திங்கள்கிழமை) ஒப்படைத்தது. இதன்படி இரண்டரை லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்களும், ஒன்றரை லட்சம்ஹெக்டேர் நிலக்கடலை மற்றும் இதர பயிர்களும் நாசமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாசமடைந்த பயிர்களின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உட்பட 8 துறைகளைச் சேர்ந்த அரசுஅதிகாரிகள் கூட்டத்தை இயற்கை சீற்ற நிவாரணக் குழு சென்னையில் இன்று கூட்டியது.
இந்தக் கூட்டத்தில் நிவாரணப் பணிகள் குறித்து விவாதித்தப் பின்னர் மதிப்பீட்டு அறிக்கை முதல்வர்பன்னீர்செல்வத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது இயற்கை சீற்ற நிவாரணக் குழுவிடம் ரூ.112 கோடிக்கே நிதி உள்ளது. எனவே நிவாரணப் பணிகளுக்குத்தேவையான நிதியை அளிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நிதி அளிக்கும் பட்சத்தில் மத்திய அரசிலிருந்து ஒரு நிவாரணக்குழு வந்து பாதிக்கப்பட்ட நிலங்களைமதிப்பீடு செய்யும்.
இதற்கிடையே 75 சதவிகித நிவாரண நிதியையாவது அரசு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications