நிருபர் கடத்தல்: பாகிஸ்தான் மீது அமெரிக்கா எரிச்சல்
வாஷிங்டன்:
அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தலில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது என்று பாகிஸ்தான் தொடர்ந்துகூறி வருவதைக் கேட்டு அமெரிக்கா எரிச்சல் அடைந்துள்ளது.
ஆனால் தீவிரவாதிகளின் கோரிக்கைகளை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது. அதற்குப் பிறகு டேனியலைக்கடத்தியவர்களிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.
இதற்கிடையே டேனியல் கடத்தலில் இந்தியாவுக்குப் பங்குள்ளது என்று பாகிஸ்தான் திடீரென்று கூறியது.தொடர்ந்து அதை வலியுறுத்தியும் வருகிறது.
ஆனால் பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கா நம்பவில்லை. மேலும் பாகிஸ்தானின் தொடர்ந்த இந்தக்குற்றச்சாட்டால் அமெரிக்கா மிகவும் எரிச்சலடைந்துள்ளது.
டேனியலை மீட்பதில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆரம்பத்தில் காட்டி வந்த ஆர்வம் இப்போதுஇல்லை. பதிலாக அவர் இந்தியாவைக் குற்றம் சாட்டுவதில்தான் கவனமாக உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள்எரிச்சலுடன் கூறியுள்ளனர்.
முஷாரப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளால் மீண்டும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்க வாய்ப்புள்ளதுஎன்றும் அந்த அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் அடுத்த வாரம் முஷாரப் அமெரிக்கா செல்லவுள்ளார். அவருடைய இந்த அமெரிக்கப் பயணம்டேனியல் கடத்தல் விவகாரம் காரணமாகப் பெரும் தோல்வியை அடையும் என்றும் கூறப்படுகிறது.
நிருபர் கடத்தலில் மேலும் 2 பேர் கைது:
இதற்கிடையே டேனியல் கடத்தப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேரை பாகிஸ்தான் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
கைதான 2 பேரையும் பாகிஸ்தான் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் தங்களிடமிருந்தசெல்போனில் இருந்து பல தொலைபேசிகளுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
அந்த தொலைபேசி நம்பர்களுக்கு உரியவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்தக்கடத்தல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணமான ஷேக் ஒமர் கராச்சியிலிருந்து பஞ்சாப்புக்கு தப்பிச் சென்றுவிட்டதாக பாகிஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications