ராஜினாமாவுக்கு முயன்ற வாஜ்பாய்: உடுப்பி சுவாமிகள்
பெல்லாரி (கர்நாடகம்):
ராமர் கோவில் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பினரிடம்ஒப்படைப்பதைவிட ராஜினாமா செய்வதே மேல் என்று பிரதமர் வாஜ்பாய் தெரிவித்ததாக உடுப்பி சுவாமிகள்கூறினார்.
வி.எச்.பி. அமைப்பை நிறுவியவர்களில் உடுப்பி பெஜாவர் மடத்தின் விஸ்வேஸ தீர்த்த சுவாமிகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. தற்போது ராமர் கோவில் அமைப்புக் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார்.
சமீபத்தில் வாஜ்பாயைச் சந்தித்த வி.எச்.பி. தலைவர்களுடன் விஸ்வேஸ தீர்த்த சுவாமிகளும் இருந்தார். ராமர்கோவில் கட்டத் தேவையான நிலத்தைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அவர்கள் வாஜ்பாயிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்பதைவிட நான் பதவி விலகத் தயாராக இருக்கிறேன் என்று வாஜ்பாய் அப்போதுஅவர்களிடம் கூறியதாக விஸ்வேஸ சுவாமிகள் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட விரும்பாததால் அந்நிலத்தை ஒப்படைக்கமுடியாது என்று வாஜ்பாய் வெளிப்படையாகக் கூறியதாகவும் விஸ்வேஸ சுவாமிகள் கூறினார்.












Click it and Unblock the Notifications