அமெரிக்க நிருபர் கடத்தலில் அன்சாரிக்குத் தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

துபாயில் கைது செய்யப்பட்ட அப்தாப் அன்சாரிக்கு அமெரிக்க நிருபர் கடத்தலில் தொடர்பு இருக்கும் என்றகோணத்தில் சி.பி.ஐ. போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்தொடர்பாக துபாய் சென்று அன்சாரியைக் கைது செய்து டெல்லி கொண்டு வந்த சி.பி.ஐ., அவனைத் தன்னுடையகாவலில் வைத்து விசாரித்து வருகிறது.

அன்சாரியிடம் இதுவரை நடந்த விசாரணையின்போது, கராச்சியில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல்கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

டேனியல் கடத்தலில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் ஷேக் ஒமர் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கும்அன்சாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமானபெடரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.) வலுவான ஆதாரங்களை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகளுடன் அன்சாரி இ-மெயில் மூலம் தொடர்பு வைத்திருந்தான் என்பதும்அதேபோல்தான் பாகிஸ்தானில் உள்ள ஷேக் ஒமருடனும் அவன் தொடர்பு வைத்திருந்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

அவனுக்கும் ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எப்.பி.ஐயும்தோண்டித் துருவி விசாரித்து வருகிறது.

செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்கு முக்கியக் காரணமான முகம்மது அட்டாவுக்கு அன்சாரிதான்ரூ.50 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தொழிலதிபர்களைக் கடத்தியதன் மூலம் கிடைத்தபணம்தான் இது.

ஆனால் அட்டாவுக்குப் பணம் கொடுத்ததை அன்சாரி தொடர்ந்து மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

அன்சாரி மீது "பொடோ" பாயுமா?

இதற்கிடையே கொல்கத்தா தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான அன்சாரி மீது பொடோ சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அன்சாரியை பொடோ சட்டத்தின் கீழ் கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து குஜராத் எல்லை வழியாக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருட்களைக்கடத்திய குற்றம் காரணமாக அவன் மீது பொடோ சட்டம் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அன்சாரியுடன் துபாயில் கைது செய்யப்பட்ட ராஜூ சர்மா இன்று பலத்த பாதுகாப்புக்கிடையேகுஜராத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறான். டெல்லியிலிருந்து நேற்று அவன் குஜராத்துக்குக்கொண்டுவரப்பட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+