சேலத்தில் சினிமா ஸ்டைலில் தப்பிய கைதி: புதுவையில் தந்தை, மகன் கைது
பாண்டிச்சேரி:
சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து கூட்டாளிகள் உதவியுடன் ஒரு கைதி தப்பிய சம்பவம் தொடர்பாகபாண்டிச்சேரியில் 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையைச் சேர்ந்த பிளாலுதீன் என்ற சித்திக், கடந்தஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தன்னுடைய கூட்டாளிகள் 6 பேர் உதவியுடன் தப்பிச் சென்று விட்டான்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு உள்பட 5 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சித்திக்கின் கூட்டாளிகள் தவறவிட்டுச் சென்ற செல்போன் மூலம் பல தகவல்கள் போலீசாருக்குக்கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் நேற்றே சேலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடம் போலீசார் துருவித் துருவிவிசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பாண்டிச்சேரி தொழிலதிபர்களான ஜீவா மற்றும் அவருடைய மகன் பாபு ஆகிய 2 பேரையும் இன்றுபோலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 20 போலி பாஸ்போர்ட்டுகளையும் ஏராளமான பணத்தையும் கைப்பற்றிய போலீசார்,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடைய வீட்டுக்கு சித்திக் அடிக்கடி வந்து போனதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications