எல்லையில் பாகிஸ்தான் சுட்டதில் இந்திய வீரர் சாவு
ஜம்மு:
ஜம்மு பகுதியில் எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
சம்பா மற்றும் ஆர்.எஸ். புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியப்படைகள் மீது பாகிஸ்தான் படையினர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டன.
இதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குல்பீர் சிங் என்பவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் பாக்ஷி ராம் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே எல்லைக் கட்டுப்பாட்டின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் மீதுபாகிஸ்தான் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில்தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications