தேனியில் ஜெ.: நாளை முதல் தீவிர பிரச்சாரம்
மதுரை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்வதற்காக அந்தத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாஇன்று (செவ்வாய்க்கிழமை) தேனி புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளரான ஜெயலலிதா 5 நாட்கள் அங்கு பிரச்சாரம் செய்கிறார்.இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மதுரை புறப்பட்டுச் சென்றார். அவருடன்சசிகலாவும் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்ஆகியோர் ஜெயலலிதாவை அன்புடன் வரவேற்றனர்.
வரவேற்பைப் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனிக்குப் புறப்பட்டுப் போனார்.மதுரை விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா சென்ற பாதை முழுவதிலும் அதிமுகவினர் ஆரவாரமாகவரவேற்பு அளித்தனர்.
சாலையின் இரு மருங்கிலும் ஏராளமானோர் திரண்டு நின்றிருந்தனர். தேனியில் இரவு ஜெயலலிதா தங்குகிறார்.நாளை (13ம் தேதி) முதல் 5 நாட்களுக்கு அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துபிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் போகும் வகையில் அவரது பிரச்சாரத் திட்டம்வகுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வருகையையொட்டி ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கூடுதல் டிஜிபி வெங்கட்ராகவன் தலைமையிலான போலீஸ் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications