தமிழக பிரச்சினைகளுக்கு 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு: காளிமுத்து
மதுரை:
தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வரும் 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு ஏற்படும் என்று சட்டசபைசபாநாயகர் காளிமுத்து கூறினார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாமதுரையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காளிமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் காளிமுத்துபேசியதாவது:
எம்.ஜி.ஆர் உருவாக்கிய பல்கலைக்கழகம் இது. இப்போது கடும் நிதி நெருக்கடியில் இப்பல்கலைக்கழகம்இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கே நிதி நெருக்கடிஏற்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் பல்கலைக்கழகத்திற்கு கவனிப்பு இல்லாமல் போய்விட்டது. வரும் 24ம் தேதிக்குப் பிறகு இந்த நிதி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.
அது மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கூட வரும் 24ம் தேதிக்குப் பிறகு தீர்வு ஏற்பட்டுவிடும் என்று காளிமுத்து கூறினார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் முடிவு வரும் 24ம் தேதிதான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications