சென்னையில் 3 புதிய போலீஸ் மாவட்டங்கள்
சென்னை:
சென்னையில் புதிதாக 3 போலீஸ் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான துணை கமிஷனர்கள்நேற்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னையில் தற்போது 6 போலீஸ் மாவட்டங்கள் உள்ளன. இந்தப் போலீஸ் மாவட்டங்களுக்கு துணைகமிஷனர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு கீழ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் வருகிறார்கள். நிர்வாக வசதிக்காக மேலும் புதிதாக 3போலீஸ் மாவட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உள்ள திருவல்லிக்கேணி, தியாகராய நகர் (முன்பு கிண்டி), மயிலாப்பூர் (முன்பு அடையாறு), அண்ணாநகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய மாவட்டங்களோடு அசோக் நகர், புளியந்தோப்பு, கீழ்ப்பாக்கம் ஆகியபுதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கான துணை கமிஷனர்களாக சமுத்திர பாண்டியன் (அசோக் நகர்), பிரபாகரன் (கீழ்ப்பாக்கம்), முத்துப்பாண்டி (புளியந்தோப்பு) ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றனர்.












Click it and Unblock the Notifications