தைவானில் அடுத்தடுத்து 3 பூகம்பங்கள்
தைப்பே:
தைவானில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அடுத்தடுத்து 3 பூகம்பங்கள் ஏற்பட்டன.
நிலப்பரப்புக்குக் கீழே சுமார் 25 கி.மீ. ஆழத்தில் பாறைகள் நகர்ந்ததால் இந்தப் பூகம்பம் ஏற்பட்டது. இந்தப்பூகம்பம் ரிச்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த சிறிது நேரத்திலேயே மேலும் 2 பூகம்பங்கள் ஏற்பட்டன. இவற்றின் அளவுகள் 5.2ஆகரிச்டர் அளவுகோலில் பதிவாகின.
ஆனால் இந்தப் பூகம்பங்களினால் இதுவரை எந்தவிதமான சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றுஅதிகாரிகள் தெரிவித்தன.
கடந்த டிசம்பர் மாதம்தான் தைவான் நாட்டை ஒரு பெரும் பூகம்பம் (6.5) தாக்கியது. ஆனால் அப்போதும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
ஆனால் கடந்த டிசம்பர் 21, 1999ல் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் (7.6) 2,400 பேர் கொல்லப்பட்டனர். ஒருலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications