டி.ஆர். தொடர்ந்து ஓட்டு வேட்டை
தேனி:
திமுக அரசு செய்துள்ள சாதனைகளை எண்ணிப் பார்த்து ஆண்டிப்பட்டி மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்றுதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் டி.ராஜேந்தர் பிரச்சாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வைகை சேகருக்கு ஆதரவாக டி.ராஜேந்தர் ஓட்டுவேட்டையாடினார். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று அவர் ஓட்டுக் கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசின் சாதனைகளை எண்ணிப் பாருங்கள், பிறகு ஓட்டுப் போடுங்கள்.
பர்கூல் வெற்றி பெற்ற பிறகு ஒரு தடவை கூட அந்தப் பக்கம் போகவில்லை ஜெயலலிதா. அந்த நிலைதான் இங்கும்ஏற்படும். எனவே சிந்தித்துப் பார்த்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.
உழவர் சந்தையை மூடுவதுதான் அவர்கள் செய்யும் சதித் திட்டம். ஆனால் மக்களுக்காக போடவில்லைஉருப்படியான திட்டம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணம், மின்சார கட்டணம், விலைவாசி உயர்வு என மக்கள் மீது சுமைகளாகஅடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கவேண்டும் என்று ராஜேந்தர் கூறினார். பிரச்சாரத்தின்போது வேட்பாளர் வைகை சேகரும் உடன் சென்றார்.












Click it and Unblock the Notifications