ஜெ. வெற்றி உறுதி: சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பலவீனமான ஒரு வேட்பாளரை திமுக நிறுத்தியுள்ளதால் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:

ஆண்டிப்பட்டியில் பலவீனமான வேட்பாளரான வைகை சேகரை திமுக தலைவர் கருணாநிதி நிறுத்தியுள்ளார்.எனவே இத்தொகுதியில் ஜெயலலிதாவின் வெற்றி நிச்சயம்.

நான் ஏற்கனவே கூறியவாறு ஒரு பொது வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்த கருணாநிதி சம்மதித்திருந்தால்,ஜெயலலிதா வெற்றியைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் பொது வேட்பாளரை நிறுத்தாமல் இப்படி யாருக்குமே தெரியாத ஒருவரை ஆண்டிப்பட்டியில் கருணாநிதிநிறுத்தியுள்ளதன் மூலம், அவரே ஜெயலலிதாவின் வெற்றிக்கு மூல காரணமாகி விட்டார்.

தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முல்லைப் பெரியாறு அணையைஉயர்த்தும் விஷயத்தில் தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுவாமிகூறினார்.

முன்னதாக ஈரானில் ஒருவார காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய சுவாமி,இந்தியாவும் ஈரானும் தங்களுக்கிடையிலான 3,000 ஆண்டு நல்லுறவைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+