சரக்கு ரயில் தடம் புரண்டது: டெல்லி-சென்னை போக்குவரத்து பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திராவில் ஒரு சரக்கு ரயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை தடம் புரண்டதையடுத்து, டெல்லி-சென்னைரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் காவாலி என்ற இடத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஒரு சரக்கு ரயில்தடம் புரண்டது. இந்த ரயிலின் 8 பெட்டிகள் தனியாகக் கழன்று சென்று அருகில் உள்ள தண்டவாளங்களில்விழுந்தன.

இதனால் இப்பாதையில் ரயில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு, ஜி.டி. எக்ஸ்பிரஸ் உள்பட பலரயில்களும் காவாலிக்கு முன்பாக உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் சென்னையிலிருந்து டெல்லிக்கு இன்று காலை கிளம்ப வேண்டிய ரயிலும் இன்று மாலை வரை கிளம்பாதகாரணத்தால், பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எப்படியும் இன்று மாலைக்குள் தடம் புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டு, அப்பாதையில் ரயில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விடும் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+