திமுகவுக்கு ஆதரவாக பாஜக ஓட்டு வேட்டை
ஆண்டிப்பட்டி:
தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியான திமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள்ஆண்டிப்பட்டி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியின் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழகபாஜக தலைவரான டாக்டர் கிருபாநிதி பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின்போது கிருபாநிதி பேசியதாவது:
தாழ்த்தப்பட்டவர்களைப் பல்லக்கு தூக்கிகளாகவும் மேளதாளம் வாசிப்பவர்களாகவும்தான் பிற கட்சிகள்பயன்படுத்துகின்றன.
ஆனால் பாஜக மட்டுமே மனிதனை மனிதனாக மதிக்கிறது. இதை நீங்கள் வீட்டுக்குச் சென்று யோசித்துப் பார்க்கவேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் மக்களுக்குப் பல நன்மைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே திமுகவை ஆதரித்து நீங்கள்ஓட்டுப் போட வேண்டும் என்று கிருபாநிதி பிரச்சாரத்தில் பேசினார்.
இதற்கிடையே தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசனும் இன்று பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளார்.
வைகை சேகருக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு அவர் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று தீவிரப் பிரச்சாரம்செய்யவுள்ளார்.
எங்கே பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்த திமுகவினருக்கு பாஜகதலைவர்களின் இந்தப் பிரச்சாரம் சற்றே தெம்பைக் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications