இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை: பாக். குற்றச்சாட்டு
வாஷிங்டன்:
இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர் வாஷிங்டனில் வில்சன் சென்டரில் பேசுகையில் இந்தஅபாண்டமான குற்றச்சாட்டைக் கூறினார்.
அவர் பேசுகையில், இந்தியா சமீபத்தில் ஏவுகணைச் சோதனை நடத்தியது. இது தவிர அணு ஆயுதசோதனையையும் மிக ரகசியமாக நடத்தியுள்ளதாக எநக்கு தகவல் கிடைத்துள்ளது. இது எங்களை தூண்டிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ள சோதனையாகும் என்றார்.
அப்போது வில்சன் சென்டரின் இயக்குனர் பாப் ஹாத்வே, இந்த அணு ஆயுத சோதனை குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா என்று முஷாரபிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த முஷாரப், நான் இதற்கு ஆதாரம் எதையும தர முடியாது. ஆனால், அணு ஆயுத சோதனைநடத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து நிச்சயமான தகவல்கள் வந்துள்ளன. இதை அமெரிக்கத் தலைவர்களிடமும்கூறியுள்ளேன் என்றார்.
பின்னர் வழக்கம்போல் காஷ்மீர் பல்லவி பாடினார். இந்திய நாடாளுமன்ற்தின் மீது தாக்குதல் நடந்ததைகண்டிக்கிறேன். ஆனால், இதையே காரணமாக வைத்துக் கொண்டு பாகிஸ்தானைத் தாக்க இந்தியா முயல்வது கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
பின்னர் பொது மக்கள் பேசுகையில், கார்கில் ஊடுருவலை நடத்தியதே நீங்கள் தானே எனக் கேட்டனர். இதற்குபதிலளித்த முஷாரப், ஏன் கார்கிலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். சியாச்சின், கிழக்குப் பாகிஸ்தான் போர்(பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட போர்) ஆகிய பிரச்சனைகளில் இருந்து ஆரம்பியுங்களேன் என்றார்.
பின்னர் அவரே, நாம் வரலாற்றை திரும்பிப் பார்க்கக் கூடாது. அது கசப்பானதாக இருக்கலாம். எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் அமைதியின் முக்கியத்துவம் எனக்குத் தான்தெரியும்.
காஷ்மீர் பிரச்சனையை மூன்றாவது நாடு தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்றார்.
-
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications