இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை: பாக். குற்றச்சாட்டு
வாஷிங்டன்:
இந்தியா ரகசிய அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர் வாஷிங்டனில் வில்சன் சென்டரில் பேசுகையில் இந்தஅபாண்டமான குற்றச்சாட்டைக் கூறினார்.
அவர் பேசுகையில், இந்தியா சமீபத்தில் ஏவுகணைச் சோதனை நடத்தியது. இது தவிர அணு ஆயுதசோதனையையும் மிக ரகசியமாக நடத்தியுள்ளதாக எநக்கு தகவல் கிடைத்துள்ளது. இது எங்களை தூண்டிவிடவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டுள்ள சோதனையாகும் என்றார்.
அப்போது வில்சன் சென்டரின் இயக்குனர் பாப் ஹாத்வே, இந்த அணு ஆயுத சோதனை குறித்து விளக்கமாகக் கூறமுடியுமா என்று முஷாரபிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த முஷாரப், நான் இதற்கு ஆதாரம் எதையும தர முடியாது. ஆனால், அணு ஆயுத சோதனைநடத்தப்பட்டிருக்கலாம் என்பது குறித்து நிச்சயமான தகவல்கள் வந்துள்ளன. இதை அமெரிக்கத் தலைவர்களிடமும்கூறியுள்ளேன் என்றார்.
பின்னர் வழக்கம்போல் காஷ்மீர் பல்லவி பாடினார். இந்திய நாடாளுமன்ற்தின் மீது தாக்குதல் நடந்ததைகண்டிக்கிறேன். ஆனால், இதையே காரணமாக வைத்துக் கொண்டு பாகிஸ்தானைத் தாக்க இந்தியா முயல்வது கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
பின்னர் பொது மக்கள் பேசுகையில், கார்கில் ஊடுருவலை நடத்தியதே நீங்கள் தானே எனக் கேட்டனர். இதற்குபதிலளித்த முஷாரப், ஏன் கார்கிலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். சியாச்சின், கிழக்குப் பாகிஸ்தான் போர்(பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட போர்) ஆகிய பிரச்சனைகளில் இருந்து ஆரம்பியுங்களேன் என்றார்.
பின்னர் அவரே, நாம் வரலாற்றை திரும்பிப் பார்க்கக் கூடாது. அது கசப்பானதாக இருக்கலாம். எதிர்காலத்தைத்தான் பார்க்க வேண்டும். நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். இருந்தாலும் அமைதியின் முக்கியத்துவம் எனக்குத் தான்தெரியும்.
காஷ்மீர் பிரச்சனையை மூன்றாவது நாடு தலையிட்டுத் தீர்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications