For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

இந்தியா ரகசியமாக அணு குண்டு சோதனை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,


இது போன்ற தகவல் எங்களுக்கு ஏதும் வரவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை.

1998ம் ஆண்டுக்குப் பின் இந்தியா அணு குண்டு சோதனை எதையும் நடத்தவில்லை. இனியும் நடத்தாது என்றுநம்புகிறோம் என்றனர்.

அமெரிக்க எம்.பி. கண்டனம்:

இந் நிலையில் எதற்கெடுத்தாலும் இந்தியாவை பாகிஸ்தான் குறை கூறி வருவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கமூத்த எம்.பியான ஜிம் மெக்டர்மட் கூறினார்.

முதலில் இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டவில்லை என்பதை முஷாரப் நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தினமும் பல தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது.அதை முதலில் முஷாரப் நிறுத்த வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரிப்பதால் மட்டும் பாகிஸ்தான் நல்ல நாடாகிவிட முடியாது.அமெரிக்க நிருபர் கடத்தல் விவகாரத்தில் கூட தேவையில்லாமல் இந்தியாவை இழுத்தது முஷாரபின்அலட்சியமான போக்கைத் தான் காட்டுகிறது.

இந்தியா கோரியுள்ள 20 சர்வதேச தீவிரவாதிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதைமுஷாரப் விளக்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X