விருதுநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலி
விருதுநகர்:
விருதுநகரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் உள்பட 5 பேர் பலியானார்கள்.
விருதுநகர் ஆண்டிக்கிணறு தெருவில் ராமர் என்பவரது வீட்டின் தரைத் தளத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)மராமத்து பணிகள் நடந்து வந்தன. இப்பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பக்கத்தில் இருந்த பாழடைந்த வீடு திடீரென இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகள் ராமர் வீட்டின் மீதுவிழுந்ததில் அவரது வீடும் அப்படியே இடிந்து விழுந்தது. இதில் மராமத்து வேலை பார்த்துக் கொண்டிருந்த 8 பேர்அப்படியே மண்ணுக்குள் புதைந்தனர்.
தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் அக்கம் பக்கத்தில் இருந்தோரும்வேலுச்சாமி, செளந்தரம் மற்றும் முருகன் ஆகிய 3 பேரை உயிருடன் மீட்டனர்.
ஆனால் மற்ற 5 பேரையும் மீட்க முடியவில்லை. பாண்டியராஜன், பாண்டி, சின்னப்பாண்டி, ஒரு பெண் உள்பட 5பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துநடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications