தீண்டாமையை எதிர்த்துப் போராட மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
கோயம்புத்தூர்:
தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்னும் நீடித்து வரும் தீண்டாமையை எதிர்த்துப் போராடப் போவதாகதமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மாநில மாநாட்டில்இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் தீமைகளுக்கு எதிராகப் போரிடவும் மார்க்சிஸ்ட் கட்சிதீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
பெரியாருடைய பெயரைச் சொல்லிக் கொண்டு தமிழகத்தில் தோன்றிய 2 முக்கியக் கட்சிகளும் இந்த முக்கியமானபிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தவறிவிட்டதாகக் கூறும் மார்க்சிஸ்ட், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கப்போராடவும் முடிவு செய்துள்ளது.
அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் உடல் ரீதியானகொடுமைகளை எதிர்த்துப் போராடவும் மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும் சிறுமிகளைக் கற்பழித்தது தொடர்பான வழக்குகளை அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இவை தவிர, கூட்டுறவு அமைப்புகளுக்காக தனித் தேர்தல் கமிஷனை நியமிக்க வேண்டும், மூடிக் கிடக்கும்தொழிற்சாலைகள் மற்றும் மில்களைத் திறப்பதற்கும் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப் படாமலிருக்கும் ரயில்வேதிட்டங்கள் ஆகியவற்றுக்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைள் தொடர்பானதீர்மானங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications