திருச்சி அருகே பிடிபட்ட 6 அடி நீள முதலை
திருச்சி:
திருச்சி அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (புதன்கிழமை) காலை 6 அடி நீளமுள்ள முதலைபிடிபட்டது.
திருச்சி அருகே காட்டூரில் உய்யன் கொண்டான் கால்வாய் உள்ளது. இதற்கு அருகில் விக்டோரியா குடியிருப்புப்பகுதி உள்ளது.
இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஒரு பெண் தண்ணீர் கொண்டு செல்ல அந்த கால்வாய்க்கு அருகில் போனார்.அப்போது 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று அந்த கால்வாயில் இருந்து ரோட்டோரப்பகுதிக்கு செல்வதைப் பார்த்துஅந்தப் பெண் பயந்து அலறினார்.
அந்தப் பெண் போட்ட சத்தத்தில் முதலை அருகில் உள்ள முட்புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது. அலறல்சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல்அனுப்பினர்.
திருச்சி தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் கே. பார்த்திபன் உள்பட 7 தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துபுதருக்குள் மறைந்திருந்த முதலையை பெரும் போராட்டத்துக்குப் பின் வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.
பின்னர் அந்த முதலை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த முதலையைமுக்கொம்புவில் உள்ள சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.
குடியிருப்புப் பகுதியில் இந்த முதலை பிடிபட்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
திருச்சியில் காவிரி ஆறு ஓடுவதால் திருச்சி சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி முதலைகள் பிடிபடுகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவில் தெப்பக் குளத்தில் ஒரு முதலை பிடிபட்டதுநினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications