கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்கிறார் ஜெ.
தேனி:
அதிமுக வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) முதல் ஆண்டிப்பட்டிதொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
ஆண்டிப்பட்டியில் 5 நாட்கள் பிரச்சாரம் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து விமானம்மூலம் மதுரை வந்தார் ஜெயலலிதா. பின்னர் அங்கிருந்து கார் மூலம் தேனி புறப்பட்டுச் சென்றார்.
புதன்கிழமை முதல் அவர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். முதல் நாளான புதன்கிழமை, கண்டமனூரில் இருந்துதனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
புதுராமச்சந்திராபுரம், ராஜேந்திரா நகர், அண்ணா நகர், அய்யனார்புரம், கொம்புக்காரன் புலியூர், தேவராஜன் நகர்,பாலூத்து விலக்கு, கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, பரமக்குடி, தெய்வேந்திரா நகர், போசாந்தபுரம், கோம்பைதொழு காலனி, கோம்பை தொழு ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா.
இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா இரவு தேனி வந்து அங்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளபங்களாவில் தங்குகிறார்.












Click it and Unblock the Notifications